திருவள்ளுவ நாயனார் அருளிச்செய்த ஞான வெட்டியான் – 1500
வெண்பா
📖 பாடல் எண்: (0271) 📖
முக்கோணச் சக்கரத்தில் முப்பாழுக் கப்புறத்தில்
சட்கோண வீட்டுத் தலையிடியில்- அக்கோணம்
வெளியில் வளர்ந்தருளும் வெங்க நதியான
குழியில் வளர்ந்த குழவி.
📖 பாடல் எண்: (0272) 📖
வாசிகட்டிப் பந்தடித்து மாறி யிருகாலால்
நேசமுட னேபிடித்து நின்றறிந்து- ஓசைதனில்
ஆதிச் சிலம்பொலியை யண்டந் தனிலெழுப்ப
நீதியுட னேவளர்ந்து நின்றேன்.
📖 பாடல் எண்: (0273) 📖
ஒட்டுப் பலகை யொருசாண் சிறுவீட்டில்
முட்டி வளர்ந்து முனையடியில்- நட்டு
அனந்தகம் பத்தடியி லகத்திய னேகண்டு
இன்பமுடன் யான்வளர்ந்தே னினி.
விருத்தம்
📖 பாடல் எண்: (0274) 📖
இப்படியே விழிமடவார் கெர்பபத் துள்ளே
யினிவளர்ந்த நேர்மையெல்லா மியம்புங் காலை
எப்படியுந் தப்பிதங்க ளினிவா ராமல்
என்னாலே யறிந்தமட்டு மியம்பி னேன்காண்
சொற்படியுஞ் சுழிமூல வீட்டுக் குள்ளே
துகையான கருவிநின்ற சூக்ஷா சூக்ஷம்
இப்படியே வகுத்துரைத்த மைந்தர்க் கெல்லாம்
இனியமுறை யிப்புவியி லியம்பு வேனே.
📖 பாடல் எண்: (0275) 📖
பத்தான திங்கள்சென்று பிறந்த பாலன்
பாக்கியமனு பவித்துப்பர தேசி யாகி
விஸ்தார மானபரி கரியு மேறி
விட்டகுறை தவிர்ந்துடனே யிறந்து வுண்ணும்
அஸ்தான திரவியத்தில் வாழ்ந்து மாறி
அதுகடந்து வையமடுத் ததுவு முண்டு
சித்தாடு கின்றசிவ யோகி யாகித்
திரிந்தவகை யறிந்தமட்டுஞ் செப்பு வேனே.
📖 பாடல் எண்: (0276) 📖
ஒருத்தனவன் கருத்தாலே யுலக மாள்வன்
உகந்துலகில் வாழ்ந்துஇரந் துண்டு வாழ்வன்
பெருத்தொருவன் புவியாசை பிரித்துக் கொள்வன்
பிராணன்வெறுத் தகமீறிப் பிதிர்களாவன்
துரைத்தனங்கள் செய்துபெருஞ் சிவிகை யேறிச்
சுவைமாறிச் சிவயோகஞ் செய்து வாழ்வன்
வெறுத்திந்தச் சபைதனிலே யாண்டே கேளீர்
விபரமெல்லாம் வெளியாக விளம்பு வேனே.
📖 பாடல் எண்: (0277) 📖
சுந்தரஞ்சேர் நாதவிந்து மூலந் தன்னில்
துளிபெருகி யொருமடையி லோடும் போது
அந்தமில்லா முகபேத மான வாறும்
அழகுமஷ்ட வயிஸ்வரிய மமைந்த வாறும்
சந்ததமி ழுரைத்தவர்கள் கற்ற வாறும்
சந்நியாசி தவசிகளாய்ச் சார்ந்த வாறும்
கந்தமலர்ப் பூங்குழலை வெறுத்து நின்ற
காரணத்தை யின்னதென்று கருது வேனே.
📖 பாடல் எண்: (0278) 📖
அறிவறிந்து மனுபோகஞ் செய்யா மாண்பர்
ஆதிவிந்து நாதமென்று மறியா மாண்பர்
கருவறிந்து பொறியடங்கிச் சித்த ரானார்
கருத்துமனம் ரெண்டாகி யோகி யானார்
திருவுடனே சேராமல் ஞானி யானார்
தேசமதில் பூசைசெய்யுஞ் சைவ ரானார்
குருவுடனே சீஷனென்று மிருவ ரானார்
குறிப்பறிந்து பிண்டமதிற் கூறு வேனே.
📖 பாடல் எண்: (0279) 📖
அலையாமல் பசியறிந்து உண்ணும் பேரும்
அனுதினமுந் துயரமதி லழுந்தும் பேரும்
நிலையாமல் நினைவுதடு மாறும் பேரும்
நித்திரையில் பயந்தெழுந்து நின்ற பேரும்
துலையாம லுலகமெல்லாந் திரிந்த பேரும்
சேர்ந்துமொரு சந்திதனில் மடிந்த பேரும்
மலையாமல் போர்க்களத்தில் ஜெயித்த பேரும்
வகித்தவிந்தி லுதித்தவகை வசனிப் போமே.
📖 பாடல் எண்: (0280) 📖
மந்திரங்கள் கல்விமிகக் கற்ற பேரும்
மகத்தான சாஸ்திரங்கள் வகுத்த பேரும்
சிந்தையெனுங் கிரியைதனி லிருந்த பேரும்
ஜெகஜால மறிந்துலகில் வாழ்ந்த பேரும்
அந்தமெனும் யோகமதி லடர்ந்த பேரும்
அனாதியெனு ஞானமறிந் தமைந்த பேரும்
இந்தவகை யிப்படியே யான வாறும்
எனையீன்ற குருவருளா லியம்பு வேனே.
இடைபின் கலையளவு
( தரு )
ஆராறமைத்தவிதியாண்டே- கருவூரினில்
யானும்விதித்தவிதியாண்டே.
📖 பாடல் எண்: (0281) 📖
பார்தனிலேகருவூர் பாலனமைந்தவிதி
சீர்பெறுஞ்செல்வமுண்டான செய்தியைச்சொல்லுவேனாண்டே
தாரணிதனிலேவதந்தைதாயுமிருவர்கூடி
கருவிரதிகேளிதானாடிய போதினில்- ஆரா.
📖 பாடல் எண்: (0282) 📖
ஓடுங்கதிர்மதியுமொன்றுட னிரண்டும்வளர்ந்தால்
நீடுலகும்புவியில்வாடு வார்வறுமைகொண்டு
ஓடுமதியுங்கதிரோ டிரண்டொன்றுபாய்ந்தால்
வீடுமிழந்துவையமேலுந் தரித்திரவான்காணும்- ஆரா.
📖 பாடல் எண்: (0283) 📖
முதல்மூன்றும்பூரணசந்திரன் விதமாயமைக்குமைந்தன்
சுதனருள்கல்வியும்பாக்கிய மதிகலைபதினாறெனில்
அதுவுமல்லாமனாலி லருணன்சோமனுங்கூடில்
விதியமுழையில்மைந்தன் விவேகியோகவானாண்டே- ஆரா.
📖 பாடல் எண்: (0284) 📖
நாலுகலைபிரியா ரவிதன்மதிவளரில்
பாலன்தனக்கெந்நாளும் வாலப்பருவங்காணும்
காலையில்பாலன்னஞ் சுவைசுகியோடதுமாறாது
காலனணுகாதஷ்ட கனயோகவான்காணும்- ஆரா.
📖 பாடல் எண்: (0285) 📖
வஞ்சிகெர்ப்பந்தனிலே வளருமதியஞ்சானால்
மிஞ்சும்புகழ்பாக்கியங் கொஞ்சும்யோகவானாண்டே
ரஞ்சிதக்கருக்குழியிலாத லால்மதியாறானால்
செஞ்சொலும்பார்தனிற்காணி செழிக்கும்பதியுண்டெனில்- ஆரா.
📖 பாடல் எண்: (0286) 📖
மாதுவிழிமடவாள் மதிசூலகெர்ப்பந்தனிலுந்
தாதுமதியேழெனில் தழைத்துவாழ்வார்கள்செல்வம்
சாதனமிதுதப்பாது நாதவிந்தாலனேகம்
பேதாபேதங்கள்கோடி மேதினியோர்களிவ்வாறு- ஆரா.
விருத்தம்
📖 பாடல் எண்: (0287) 📖
கங்குநதி நகரிலங் கருவூர் நாட்டில்
கதிர்மதியா லெடுத்தபலன் கணக்க தாக
மங்கையுடல் மாதுகெர்ப்பந் தனிலே விந்து
மகிமையதா யவதரித்த வண்மை யெல்லாம்
சிங்கார மாகவெந்தன் தெளிவி னாலே
திங்கள்பத்தி லுதித்தமைந்தன் செயலே கண்டு
செங்கமல மங்கையம்பி கைப்பெண் மாது
செப்பிடிலுங் கருத்தையினித் தெளிவிப் பேனே.
பிண்டோற்பத்தி
( தரு )
தெந்தினதினதினனா- தினதின-
தெந்தினதினதின- தினதினனா.
📖 பாடல் எண்: (0288) 📖
திட்டமுடன்வெட்டவெளியில்- கலையெட்டில்
செனித்தருள்கெர்ப்ப மதினுற்பவத்தைக்கேள்
வட்ட மதிவிட்டகுறையால்- செல்வம்
வளர்ந்திடுந்திருமுகம் விளைந்திடுங்காண்
அட்டதிசையம்பரத்திலே- சுழியின்முனை
ஆதாரகுண்டலி தனகத்துக்குள்ளே
விட்டமதியொன்பதிலே- விந்துதரிக்க
விஜயராஜாங்கயோக வாசஞ்செய்வார்- தெந்தின.
📖 பாடல் எண்: (0289) 📖
உதித்தபெருந்துறைமூல- மூத்தைக்குழியி
லுற்பனமாகவேகெர்ப்பந் தரித்ததென்றால்
பதித்தசமதிலுதித்தால்- விந்துசிவ
பாருலகிலட்டசித்து மாடிடுவர்காண்
விதித்தவிதியறியாத- கருக்குழிதன்
வீதியிலுநாதமதுமேவிடிலுமே
பதித்தமதிபதினொன்றா – லட்டசுக
பாக்கியசிவயோக ராஜயோகியிவர்காண்- தெந்தின.
📖 பாடல் எண்: (0290) 📖
எண்ணிரண்டாங் கோட்டினிலே- சுரோணித
மென்றிருக்கின்றநாதமெனு முதிக்கையிலே
பன்னிரண்டில்மதியானா- லிப்புவியில்
பாராளுந்துரைத்தனஞ்செய் தரசாள்வார்
உன்னிதச்சுழிமுனையிலே- கெர்ப்பந்தரித்து
உற்பனமாகவேமதிபதி மூன்றானால்
இன்னிதராஜாங்கந்தனில்- மந்திரியாகி
யேகசக்கரவர்த்திகட்கு யோக்கியவான்காண்- தெந்தின.
Next Post