திருவள்ளுவ நாயனார் அருளிச்செய்த ஞான வெட்டியான் – 1500
அவயவங் குறையுமுறை
( தரு )
வித்தில்வின்னமெய்துமாண்டே- இனி
வினைப்பயனருளுவேனாண்டே.
📖 பாடல் எண்: (0251) 📖
வசனங்கெமனந்தானமதுவுஞ் சேராதிடில்என்னில்- வார்த்தை
மசக்கல்தடத்தவெனில்கொடுத்தல் வாராதுகாணாண்டே
விசர்க்கமானந்தமிரண்டுஞ் சேராதிடில்காணும்- மூல
மிசக்கல்மலசலமும் விடுத்திடாதுகாணாண்டே- வித்தில்.
📖 பாடல் எண்: (0252) 📖
மனமாங்காரஞ்செயலும் வசனித்திராதிடில்வாதம்- கன
நினைவைக்கொண்டு விசாரித்தியல்பு கோபத்தைப்போக்குமாண்டே
செனனச்சித்தமுயற்சி சித்தமுடலும்வேறாய்ச்- சிதறி
இயல்புதினமுமறியுமன்புந் தயவுங்குறைந்திடுங்காணான்டே- வித்தில்.
📖 பாடல் எண்: (0253) 📖
பரிவாகிடுதல்நெஞ்சமறிவொன்றதுஞ் சேராதேபோனால்- இந்தப்
பரியாசம்புவியதனில்பாரிலொன்று நடக்காதாண்டே
சிறியத்துரியகலைசுழியிற் சேராதிடிலும்போனால்- விழியும்
சிதறிச் சுருங்கியிருமுழியுங்கலங்கிடுங் காணாண்டே- வித்தில்.
📖 பாடல் எண்: (0254) 📖
இடைபிங்கலையுஞ் சுழிமுனையுஞ் சேராதிடிலும்- வேறாய்
இன்பமிடறுங்கூனாய்க்குருடாய் முருடுமொண்டியுமாகுமாண்டே
திடசிங்குவைபுருடனிரண்டுஞ் சேராதிடினுமாகில்- அன்னம்
திடப்படாதுசெவியுஞ் சிமிட்டிடாதுகாணாண்டே- வித்தில்.
📖 பாடல் எண்: (0255) 📖
காந்தாரியத்திரண்டதுங்கலந் துறவாடிடாதாகில்- நல்ல
கந்தமுஞ்சந்தஞ்செவியுங்கருதான் குறைந்திடுகாணாண்டே
சுந்தரவலம்புருடன்சங்குனி ரெண்டதுஞ்சேராதாகில்- இந்த
மைந்தனிடதுதாள்வாயதாதுலிங்கம் குறையுமாண்டே- வித்தில்.
📖 பாடல் எண்: (0256) 📖
பேதமாகியக்குரோதன்பின்பு சேர்ந்திடிலும்- போனால்
பித்தும்பிதற்றுஞ்சுரணையற்றுப் பிரியுமறிவுசொக்குமாண்டே
போதகப்பிராணனபானன்வியானனுஞ் சேராதிடிலுமாகில்- பிரியா
பேதித்துவன்னமுமலம்பிரித்து விடாதுகாணுமாண்டே- வித்தில்.
📖 பாடல் எண்: (0257) 📖
உதானனுஞ்சமானன்கூர்மன்னுகந்து சேராதிடிலுமாகில்- சலம்
இறக்கமில்லாமல்மனஞ்செலுத்தேப்ப மிடுப்பிக்குமாண்டே
சூதனாந்திரிகரனுமாறியே சேராதிடிலுஞ் சேர்ந்தால்பார்வை
நீதவிழிமாறிடுஞ்சாதனையி தாகிடுமாண்டே- வித்தில்.
📖 பாடல் எண்: (0258) 📖
சத்தமுயிர்தேவதத்தன்வித்திலுஞ் சேராதிடிலுமாகில்- நல்ல
புத்தியுங்கொட்டாவிவிக்கல்நகைப்புஞ் சிரிப்பில்லைகாணாண்டே
மத்தலத்தனஞ்செயனுமவ்விடம் விட்டதுசேரா- தாகில்
சுத்தம்வித்தையும்பத்தியுங்கல்விவிழலா முளமாந்த பித்தமாண்டே- வித்தில்.
📖 பாடல் எண்: (0259) 📖
வாய்வதுவுமீரைஞ்சுவளர்பிறையு மீரெட்டுமோடில்- வாசி
தேய்பிறையுமீராறுதேறுநாடியுந் தசைமாறிகலைபாயுந்தேகாதி
தேகம்பகிரண்டங்களாவிபாய்ந்தும் அமைத்திடும்
நோயுமூழ்வினைமீறி நோக்குங்காசமோசாடிவினை- வித்தில்.
விருத்தம்
📖 பாடல் எண்: (0260) 📖
மருவுயருங் கயிலைநக ரகண்ட வீதி
மறையிலகுந் திரை கடந்து நாத விந்து
உருவுயர்ந்த பதின்மூன்றாங் கோட்டின் மேலு
மோங்கியொரு துளியிறங்கித் திரண்டு மேவிக்
கருவளரு பெருகுநதிக் கப்பாலேதான்
கனகரத்ன வீட்டிலொரு வீடு கட்டிக்
குருவிருந்த மண்டபத்தில் குடிதா னேறிக்
கூடிநின்ற குறிகளெல்லாஞ் சொல்வே னாண்டே.
📖 பாடல் எண்: (0261) 📖
ஆதியென்ற நாதவிந்த மைந்த வாறு
மளவற்ற கருவிலுரு தரித்த வாறும்
நீதியுட னின்றுவய துரைத்த வாறும்
நிலைமையில்லாக் கருக்கரைந்து நின்ற வாறும்
வீதியிலே பிறந்தெழுந்து போன வாறும்
விவரமதை யின்னதென்று விதித்த வாறும்
பாதிமதி சடையணிந்த பரனே போற்றிப்
பத்தியுள்ள பெரியோர்கள் பாதம் போற்றி.
📖 பாடல் எண்: (0262) 📖
வடிவெழுதி முடியாத நாத விந்து
மாறியுயிர் கலைபிரிந்து பரத்தில் மேவும்
முடிவிலொரு மலரெனவே பூத்த வாறு
முனைசாய்ந்து வாடாமல் பின்சின் வாறும்
குடிலமெனு நடுவணையில் கருக்குள் வாறுங்
கூடியிரு கால்வாங்கி யடியிற்பாய்ந்து
மடிமீதில் கருவியெனும் வீடுண்டாக்கி
வகைவிபர மாகவெல்லாம் வகுத்தே னாண்டே.
📖 பாடல் எண்: (0263) 📖
உருவெடுத்து வந்தவர லாறு சொன்னேன்
ஊமையெனுஞ் செவிடான துருவுஞ் சொன்னேன்
கருவுதித்து நின்றசைவு வயதுஞ் சொன்னேன்
கலைபிரிந்து மாறுகின்ற கருத்துஞ் சொன்னேன்
துருவெடுத்துப் பூரகத்தி லுதித்து நின்ற
துயரமெல்லாம் விபரமுடன் சொன்னேன் காணும்
அறிவறிந்த பெரியோர்கள் புவியின் மீதி
வவர்மகிழ வவனியுள்ளே ரறியத் தானே.
📖 பாடல் எண்: (0264) 📖
விற்பனமாந் துருவவெளிக் கப்பால் நின்ற
மேலான சகலகலை நாவி னாலே
இப்பாரி லுதிக்கின்ற மைந்தர்க் கெல்லா
மியல்பான வறுமைநல மிகவுஞ் சொன்னேன்
கற்பான கற்பனையா லெழுந்த பாண்டங்
கருவிலுயி ராகிநின்ற கருந் துள்ளோர்க்குச்
சப்பாணி கூன்குருடா யான நேர்மை
சாதகமா யானறிந்து சாற்றி னேனே.
கொச்சகம்
📖 பாடல் எண்: (0265) 📖
நாற்சதுர மண்டபத்தில் நவ்வும்மவ்வும் ரெண்டிருந்து
தீச்சுடரை மூட்டியேதான் செங்கமல வீடதனில்
பேச்செழூம்பா வக்ஷரத்தில் பேசவுரு வாய்ப்படுதல்
காச்சி யுருக்கியொரு கருங்குகையில் விட்டனரே.
📖 பாடல் எண்: (0266) 📖
விட்டகுறை தன்னிலொரு விந்துகுறை யாகாமல்
நட்டுவிளை வித்தேனே நடுவனையி லேயிருந்து
முட்டி யெழுந்துமுனை மூலசுழி நால்வரையில்
கட்டி யுருக்கியதில் கருத்தால் வளர்ந்தேனே.
📖 பாடல் எண்: (0267) 📖
உள்ளிருந்த கள்ளரையு மூனெடுத்த நேர்மைகளும்
புள்ளிருந்த வாழ்மனையிற் புகுந்துரைத்த வாழ்த்தல்களும்
தெள்ளிருந்த தீவினையுந் தேகமிதித் தாக்கையதும்
வள்ளலெனு வம்பிகையின் வாய்மொழியாற் கண்டேனே.
கலித்துறை
📖 பாடல் எண்: (0268) 📖
தாக்கிப் பொருந்தையில் மூலத்தி னாதமுந் தாதுவிந்து
நோக்கிக் கலந்துரு வாகிய நுனியூ சிவழி
நீக்கிப் பகுத்த தலைநாசி யாலு நிரந்தரமாய்
வாக்கி லுயர்ந்த கனியாகி நின்று வளர்ந்தனனே.
📖 பாடல் எண்: (0269) 📖
கருத்தி லிருளை யகற்றி வெளியிற் கதிர்மதியில்
விருத்து வகுத்து விபரமதாய் வெற்றி யாகவேதான்
வருத்த மில்லாமல் சுழிவிட்டு வாசல் மதிநடுவில்
ஒருத்தனு மாகி வெகுஞாயங் கொண்டு திக்கின்றனனே.
📖 பாடல் எண்: (0270) 📖
இருளை யகற்றி மருளை விலக்கியே காக்ஷரத்தில்
பொருளை யடுத்துப் பயனறிந் துள்ளம் புவனம்விட்டு
அருளை யடுத்து அறைவீட்டி லோட்டி யடைத்துவைத்துத்
துளிரை வளைத்துத் தெவிட்டாக் கனியுண்டு தூங்கினனே.
Next Post