திருவள்ளுவ நாயனார் அருளிச்செய்த ஞான வெட்டியான் – 1500
விருத்தம்
📖 பாடல் எண்: (0234) 📖
குறித்துநின்று வாய்வந்திக் கமலந் தன்னில்
குமுறியே நாதவிந்து தரித்த தாகில்
வறிதாகு மைந்தருக்கு வயதீ ரைஞ்சு
வாய்வுஞ்சுழி யடங்கில்வய திருபத் தைஞ்சு
பரிவட்டச் சுழிமுனைவிட்டு விட்டத்தில் வாய்வு
பாய்ந்திடவு நாதவிந்து பதினா றென்க
நெறியான வாயுவிதைப் பின்னிட் டேறில்
நிலைக்கின்ற நாதவிந் திருப தாண்டே.
📖 பாடல் எண்: (0235) 📖
கங்குல்பக லற்றவிடந் தன்னி லேதான்
கருதிமுனை யாடுகின்ற நாத விந்து
சங்கையில்லா ரதிபோகஞ் செய்யும் போது
தாதுவிந்து கருவூரி லுதித்த சங்கை
இங்கிதமா யிடைகலையி லுதிக்கப் பெண்ணா
மியல்வாகப் பிங்கலையி லுதிக்க ஆணும்
அங்கமதா யுபையத்தி லுதிக்க மேலும்
ஆணிரண்டு மொருவழியி லமைத்த வாறே.
📖 பாடல் எண்: (0236) 📖
எழுந்ததிரு மண்டபத்தி லிருந்த நாத
மியல்பான கருவூரி லுதிக்கும் போதில்
கொழுந்துமதி யிடைகலையில் பெண்ணே யாகுங்
குறைவில்லாப் பிங்கலையி லாணே யாகும்
வழிந்தெழுந்த விருகலையி லுதித்த தானால்
வசனித்தோம் பெண்ணுடனே யானே யாகும்
செழுத்தெழுந்த சாதிவகை யிரண்டுஞ் சொன்னேன்
ஜெகநாதர் கிருபையினால் தெளிந்த நூலே.
📖 பாடல் எண்: (0237) 📖
உதித்திலகு நாதவிந்து வட்டந் தன்னி
லுட்புகுந்த கருவூரி லுதித்த போது
துதித்திலகுஞ் சூரியனில் வாய்வு சேர்ந்தால்
சுழிகலையு மாறினதா லிரண்டு மாணாம்
விதித்திலகுஞ் சந்திரனில் வாய்வு சேர்ந்தால்
விகற்பமில்லாப் பனிரெண்டு முதிக்க லாகும்
கதித்திலகும் பலபலவாய் நின்ற தானால்
காற்றதினா லாகாது ரவியு மாமே.
கொச்சகம்
📖 பாடல் எண்: (0238) 📖
வேதமறைக் கெட்டாத மிகுந்தகரு வூர்வெளியாய்
நாதமுடன் வந்துதவு நடுவணையிற் சேர்கையிலே
சூதாகு நாடிசிறு துடித்தே வகுத்ததென்றால்
பேதமில்லை யாணாய் பிறமுகமும் பாராரே.
📖 பாடல் எண்: (0239) 📖
சக்கரநின் றாடுகின்ற சத்யமுயர் வீட்டிலொரு
சுக்கிலசு ரோணிதமுந் துய்யகரு வூர்தனிலே
அக்கரமாம் பிங்கலையு மதிர்ந்து துடித்ததென்றால்
திக்கினியப் பெண்ணால் திருட்டுமிகச் செய்வாரே.
📖 பாடல் எண்: (0240) 📖
நிலையாய்க் கலையோதி நின்றுதிரு வீட்டிலொரு
அலையாத நாதவிந்து அணிவரையிற் சேர்கையிலே
துலையா மிடதுகலை துரியமதி லேயிரண்டால்
விலைமதிக்கு மாணாகும் வெகுதிருட்டுச் செய்வாரே.
வெண்பா
📖 பாடல் எண்: (0241) 📖
சண்டவெளி தாரகையில் சச்சிதா நந்தமதில்
கொண்டலெனு நாதவிந்துகூடினால்- ஒன்றதுவாய்
முட்டிச் சுழிநாடி மூன்றுந் துடித்தக்கால்
வெட்டிமடிந் திடுவார் வீண்.
📖 பாடல் எண்: (0242) 📖
அரியயனுங் காணாத ஆதிதிரு நாதவிந்து
மரியதனு வீட்டில் வருமோ- குறியாக
வளருஞ் சுழிமுனைதான் மாறித் துடிதுடித்தால்
கருவி லுயிர்விடுவார் காண்.
கலித்துறை
📖 பாடல் எண்: (0243) 📖
மதியாத வீட்டி லதிபோகஞ் செய்து மனமகிழ்ந்து
பதியான நாதவிந்த துங்கூடி யேபயி ராகியபின்
சதியாக நின்று சுழிமுனை நாடித் தயங்கினதால்
கெதிவேறு மில்லை வெகுநோய்கள் கண்டு கிடந்தனரே.
📖 பாடல் எண்: (0244) 📖
கருத்தை யிருத்தி யனுராக மாய்கை கலக்கையிலே
மருத்தெழு நாதமும் விந்ததுங் கூடி மருவியபின்
அருந்தி டும்வாச லப்பாற் சுழிமுனை யசைந்த தென்றால்
தரித்திடு மைந்தர் சுரம்வந்து சூழ்ந்து தயங்குவரே.
விருத்தம்
📖 பாடல் எண்: (0245) 📖
வையமெனும் பதினாலு வுலகுக் குள்ளே
வகுத்தெழுந்த சாதிகுல மாண்பெண் ரெண்டும்
சையோகஞ் செய்கையிலே நாத விந்து
தரித்தகெர்ப்பந் தனக்குவய துரைத்தேன் கேளீர்
குய்யமெனும் வச்சிரப்பை தனில்வ ளர்ந்த
குழவியர்க்கே வயதுநின்ற குறியுஞ் சொன்னேன்
மெய்யெனவே யோடுகலை நாலி னாலே
விளைகின்ற பொருளையெல்லாம் விளம்பு வேனே.
📖 பாடல் எண்: (0246) 📖
சுழியெழுத்து மரியெழுத்து மிரண்டுங் கூடிச்
சுக்கிலமே சிவயமெனுஞ் சொல்லும் போது
சுழியெழுத்து நாலதனா லுலக மாச்சு
கனகஜெக சாலமெனுங் காட்டி வைத்து
வெளியெழுத்தாம் அவ்வதிலே உவ்வுங் கூட்டி
விளங்குகின்ற குண்டலியி லுதிக்கும் போது
குழியெழுத்தில் வளருகின்ற மைந்தர்க் கெல்லாங்
குருடுசெவி டானவகை கூறு வோமே.
📖 பாடல் எண்: (0247) 📖
தப்பாது கருவூரின் வெளியி லேயான்
தாண்டியுயர் நாதவிந்து திக்கும் போதில்
வெப்பதிக சப்பாணி நொண்டி யாக
விதிக்கின்ற கருவிலே விளங்கும் வாறும்
ஒப்பதித வொருகாலு மொருகை நொண்டி
யோங்கியொரு பிறமுடலு திக்கு நேர்மை
கற்பான கலைநாலில் வகுத்து நின்ற
கருத்தையுமே யின்னதென்று காட்டு வேனே.
அவயவங் குறையுமுறை
( தரு )
வித்தில்வின்னமெய்துமாண்டே- இனி
வினைப்பயனருளுவேனாண்டே.
📖 பாடல் எண்: (0248) 📖
தோத்திரத்தோடுதொக்குந்துடராதே துண்டித்துப்போனால் அகம்
வேற்றுமையாயுடல்வேறு கூறாகிடுமாண்டே
மாத்தியசட்சுசிங்குவை யாக்கிராணமருவாதேபோனால்- அந்த
வெற்றிடுநாக்குமூக்குவிழியு குறையுங்காணாண்டே- வித்தில்.
📖 பாடல் எண்: (0249) 📖
சத்தபரிசரூபந்தானதுஞ் சாராமற்போனால்- மதி
வெத்திச்செவிடுடனே குருடும்விவேகமில்லா தாண்டே
புத்திர சமுங்கெந்தம்பொருந்தாமற்போய் விடுமாகில்- வாக்கு
எத்தனைசொன்னாலுஞ்செவியிசை வுபடாது ஊமையாண்டே- வித்தில்.
📖 பாடல் எண்: (0250) 📖
தூக்கியரசமுங்கெந்தந் தொந்தித்திராதெனுமாகி- உடல்
நோக்கியகைகாலும்வாய்தொடித்துச் சப்பாணியாமாண்டே
வாக்கியபாதமுபாணிவதுவுபஸ்தஞ் சேராதென்னில்- லிங்கம்
ஒக்கியசுரணையற்றுவொடுக்கங் கொண்டிடுங்காணுமாண்டே- வித்தில்.
Next Post