திருவள்ளுவ நாயனார் அருளிச்செய்த ஞான வெட்டியான் – 1500
தரு
வீடுகட்டிக்கொண்டேன் நானொரு
வீடுகட்டிக்கொண்டேன்
📖 பாடல் எண்: (0101) 📖
நகாரமகார மிரண்டையுஞ்சேர்த்து
நடுவேசதுஷ்கோண வீட்டையுங்கட்டி
சிகாரவகார யகாரமதுகொண்டு
சித்திரச்சாவடி விஸ்தாரமாகவும்
அகாரமதுக்குள்ளே யையுமென்றட்சரம்
அவ்வெழுத்தாலே யகண்டசராசரம்
உகாரமதுக்கு ளுயர்ந்தகிலியெனும்
உவ்வெழுத்தாலு முதித்தசவ்வானதும்- வீடு.
📖 பாடல் எண்: (00102) 📖
வஞ்சகமான தோராஞ்சுபெரும்பூதம்
பஞ்சறிவாகவுங் குஞ்சரவீட்டினில்
அஞ்செழுத்துள் வளரைம்பத்தோரட்சரம்
ஆனந்தமாக வலங்காரமாளிகை
கொஞ்சிவிளையாடும் ரஞ்சிதவீட்டினில்
நெஞ்சறியுங்கமலாலயமைம் பொறி
செஞ்சொல்மொழிசிவசிங்கா தனத்தினில்
கஞசமலராயிரத் தெட்டிதழினால்- வீடு.
📖 பாடல் எண்: (0103) 📖
நாலுமுழத்தினுங்காலை வளர்த்தியே
நாட்டியேசக்கரம் பூட்டியேவைத்துடன்
மேலுமீரைந்துடன் தாதுவினாடியால்
வீட்டுக்குஆக்கையைப் பூட்டிவருந்தியே
மாலுநடுவனை காலுமடியனும்
பாலுமதிவளர் மேலுஞ்சுடரினால்
மூலவன்னிச்சுழி மூவரிருப்பிடம்
வாலைகுண்டலிதன் மாளிகையாச்சுது- வீடு.
📖 பாடல் எண்: (0104) 📖
நாடித்தசவாய்வு வீரைந்துஞ்சேர்த்துமே
நாடியஷ்டதிசையு நலமாகப்பூட்டியே
வீட்டுக்குவாசலொன்பதுவு முண்டாக்கியே
வேடிக்கையாகவுநாடி நரம்பாலே
காட்டியசுக்கில சுரோணிதத்தாலே
கருவியெனுங்கரணாதிகள் சூழ்ந்திடில்
ஆட்டியமுட்டுமுடக்குக் கணுவுக
ளாக்கைப்பலப்பட நாக்குவுண்ணாக்குடன்- வீடு.
📖 பாடல் எண்: (0105) 📖
சிங்காரமான வரண்மனையஞ்சையும்
சிற்றம்பலத்துடன் பேரம்பலங்களும்
கங்கைநதிகளுந் தொண்ணூற்றறுவர்
கலந்தேயிருக்குங் கனகசபையெனும்
அங்கங்குறைவுபடாம லரண்மனை
அச்சூடுகட்டியே மச்சூடுஆலயம்
எங்கும்பிரகாசிக்கும் மிந்திரியவீடு
இடைபிங்கலைசுழியேகா க்ஷரத்தினால்- வீடு.
📖 பாடல் எண்: (0106) 📖
ஐந்துபுலனையறிவாகக் கூட்டியே
ஆதாரமாறும்வளை தனை நாட்டியே
கைந்துமதசுழி கற்பத்தையூட்டியே
கால்கொண்டுநின்றொரு மேல்கொண்டுவாங்கியே
பைந்தமிழ்சூஸ்திர நாடித்திசைக்கயிறு
பாங்குடன் கப்பிக்கயிறுமூன்றும் பூட்ட
ஐந்துபூதத்தைக் கொண்டாக்கைபிலப்பட
ஆறூருண்டாக்கியனேக விசிதமாம்- வீடு.
📖 பாடல் எண்: (0107) 📖
சுற்றுமதில்களுமா றற்சுவருடன்
துண்டுகளாகிய தண்டிகைக்கம்புகள்
பத்தியால்நின்றதோர் சித்திரச்சாவடி
பார்க்கிறபேர்க்கெலாஞ் சீர்க்கலங்காரமாய்
முத்திதருஞ் சிவசித்திரமண்டப
மோட்டுவளையு நரம்பாவிறுக்கியே
சத்தமெனுநவரத்நக் கதவுடன்
சந்நிதிவாசலிலுன்ன தமாகவே- வீடு.
📖 பாடல் எண்: (0108) 📖
நவ்வையுமவ்வையும் ரெண்டையுஞ்சேர்த்து
நலமான அவ்வையும்வவ்வையுங் கூட்டியே
சிவ்வையுஞ்சேர்த்துடனா சாரிகையில்
திடமாயெண் சாணுடல்தேகமதாகவே
அவ்வதுக்குள்ளே யாதாரமுண்டாச்சுது
அம்பிகைப்பெண்ணவளாலே வீடாச்சுது
உவ்வதுக்குள்ளே யுடலுமுண்டாச்சுது
ஓங்காரத்துள்ளே யுயிர்வந்துலாவுது- வீடு.
📖 பாடல் எண்: (0109) 📖
திங்களொன்றானபின் மூங்கின் முளைபோல்
திரண்டுருண்டே கனியாகுங்கருவுரு
சிங்காரமானதோர் திங்களிரண்டினில்
சேர்ந்துகலந்தது பாலாடைபோலவும்
இங்கிதசுக்லசுரோணிதமாகிய
இந்திரியவச்சிரவின் பவிடாமதில்
தங்கியநாதவிந்தாலே சமைந்த
சடமதின்வாறினைச் சாற்றுவனாண்டேகேள்- வீடு.
விருத்தம்
📖 பாடல் எண்: (0110) 📖
மூலமதில் வீடொன்று முடிந்த தாண்டே
முச்சந்தி வீதியதும் புறம்பாய் வைத்து
சீலமுள்ள பிரமனுக்கும் வீடொன் றாச்சு
சிறந்தருளுந் திருமால்தன் வீடொன் றாச்சு
ஞாலமதில் ருத்திரன்வீ டொன்றே யாச்சு
நலமான மயேஸ்பரன்தன் வீடொன் றாச்சு
ஆலவிட முண்ட சதா சிவனா ருக்கும்
அரண்மனையு மொன்றாச்சு ஆண்டே கேளே.
📖 பாடல் எண்: (0111) 📖
மருவுயர்ந்த வதனத்தி னாத சத்தி
வடிவான மரகதப்பெண் மாது வாலை
திரிபுரத்துக் கொருபுறமா யிலகுஞ் சோதி
சிற்பரத்தி தற்பரத்தி சிறுபெண் ணாத்தாள்
சுரிமுகத்தி னகதனத்தி துடியி டைச்சி
துலங்கும்ரத்ன மானதொரு சோதி மாது
அருமறைச்சி யம்பரத்தி யம்பி கைக்கு
அரண்மனையு மண்டபமுஞ் சமைந்த தாண்டே.
📖 பாடல் எண்: (0112) 📖
குருவுடனே சீஷனுந்தான் வாழ்ந்த வீடு
கூறான விந்திரியந் தரித்த வீடு
அரூபியெனு நாதாக்கள் துதிக்கும் வீடு
அளவற்ற வைம்பூதம் வாழ்ந்த வீடு
பருவமெனும் ஞானசிவசத்தி வீடு
பண்ணுமறைக் கெட்டாத நாத வீடு
கருவிருந்த ஞானவிந் திரிய வீடு
கட்டிவைத்தான் திருமால்தன் கயிற்றா லாண்டே.
📖 பாடல் எண்: (0113) 📖
அடிநடுவு முடியுமொரு வெண்சா ணீளம்
அங்குலமுந் தொண்ணூற்றா றாண்டே கேளிர்
கொடியமகா மேருவெனும் வளர்ந்த வீட்டில்
குடிலமங்கு லத்துக்கோர் கருவி யாகும்
படியான பதினெட்டாங் கோட்டின் மேலும்
பலபலவாய்க் கருவிகளு மமைத்த தாகில்
முடிசிறந்த ஜெகநாத ரருளி னாலே
முடிந்ததுகாண் பெரும்பரத்தி வீடு மாண்டே.
📖 பாடல் எண்: (0114) 📖
சரியையுடன் கிரியைசிவ யோக ஞானந்
தன்னையினிச் செய்திருக்கு மாத்தாள் வீடு
வரிசைதந்து விளையாடு மாதி வீடு
வளமான கருவியெல்லாம் வளர்த்த வீடு
பெரியநரம் பெழுபத்தீ ராயி ரத்தில்
பெருநாடி பெலத்தநரம் பான தாலே
பரிபூர்ண வம்பிகைப்பெண் ணிருந்த வீடு
பாகமதா யமைத்துமுடிந் தாச்சு தாண்டே.
📖 பாடல் எண்: (0115) 📖
ஒன்றிரண்டு திங்களில் கருவு மூறி
யொருமூன்று திங்களில் ரூப மாகிக்
கன்றுசது ரஞ்சுவிரு மூன்றில் தானுங்
கருத்துடனே யிடைநாசி மார்பு மாகி
என்றுரைத்த வேழுதிங்க ளெட்டுக் குள்ளே
யெண்ணரிய நாதவிந்து வுருவே யாச்சு
அண்டபிண்ட மகண்டமதா யமைந்து மேலு
மலங்கார வீடாகச் சமைந்த தாண்டே.
📖 பாடல் எண்: (0116) 📖
ஆக்கையெனும் தசநாடி நரம்பி னாலே
யடி நடுவு முடியுமா தார மாசித்
தீர்க்கமுள்ள யோனிசித்திர மதிலும் வீடுஞ்
சிவசமயத்தினருளாலே யமைத்த வாறு
மேற்கயினி யுளுத்ததொரு வுப்புப் பாண்ட
மிப்படியே சடமதுவால் வீடு மாச்சு
பார்க்கவொரு சிங்கார விசித மாகும்
பன்னிரெண்டாங் கோட்டில்வந்து பதிந்ததாண்டே.
📖 பாடல் எண்: (0117) 📖
நாலாச்சு ஆறாச்சு வீரைஞ் சாச்சு
நலமான வீராறு மீரெட் டாச்சு
மேலான விரண்டாச்சு இதுக்கப் பாலும்
வெளிகடந்து வொன்றாச்சு வுருவு மாச்சு
காலாச்சு கையாச்சு வயிறு மாச்சு
கட்டியொரு வீடாகச் சமைந்த வாறும்
சீலமுள்ள சிங்கார விசித வீட்டில்
சித்திரத்தின் பதுமையைப்போற் செனித்ததாண்டே.
ஆறாதாரவகை இந்திரிய விவரம்.
அடையாளஞ்சொல்லுகிறேன்- ஆண்டையேகேளீர்
அடையாளஞ்சொல்லுகிறேன்.
📖 பாடல் எண்: (0118) 📖
பிருதிவியப்புவுந் தேயுடன்வாயும்
பேரானவாகாச மைந்ததையும்கூட்டிக்
கருத்தில்வளருஞ் சுழிமுனைவீட்டினில்
கண்டுபுறமாக நின்றதுஆண்டையே
நிருவிகமலத்திதழாயிரத்தெட்டு
நிர்க்குண நிர்மலநேர்மையிதாகையால்
மருமலர்சூழ்திருமாலின் பதிவளர்
மாமதுரக்கனி வாழ்க்கையுமிப்படி- அடை.
Next Post