திருவள்ளுவ நாயனார் அருளிச்செய்த ஞான வெட்டியான் – 1500
வேறு – விருத்தம்
📖 பாடல் எண்: (1020) 📖
ஜெகமெலா நிறைந்த வடிவழ குடைய
திருமலர்க் கமலபொற் பதத்தில்
சீஷனென் றடியேன் சாம்புவ னெனும்பேர்
தெக்ஷணா மூர்த்தியின் செயலாய்ப்
புகழ்விளங் கதிதம் ராஜரத் தினமாம்
பூமவர் பச்சையோர் பலமாய்
புரையில்லாக் கலுவ மதனிலிட் டுபமாய்ப்
பொற்குரு பணவிடை ரூட்டி
அமலர் வீசு மதியொளி விளங்கு
மமுரிவிட் டாட்டிரு சாமம்
அதிதமா மெழுகு பதமெனும் வருத
லதனையே வழித்துபில் லையதாய்
உகையதாய்க் கதிர்தன் முகம்பட அனலி
லுணர்ந்தெடுத் துடன்வட்டி யதனில்
உபமதா யடங்கி மேல்மூடிச் சீலை
யறுத்தமண் ணேழுசெய் விதமே.
வேறு – விருத்தம்
📖 பாடல் எண்: (1021) 📖
அதிவிதிக் கதிர்தன் னொளிவதும் வீசு
அருணனில் முகம்பட அருளி
அனுக்கிர கம்புரிய ஐந்துபத் தெருவி
லக்கினி யனலது மூட்டி
துதியகத் தீசர் மலரடி பணிந்து
தொழுதுடன் தோத்திரஞ் செய்து
தொடுத்தன லாற்றிப் பசைந்தசத் தளவின்
சுகாதித மெனுஞ்சொல்ல எளிதோ
உதித்தசத் தொளிதா னுவரச மிதுபே
ருலகினில் நிலவதுக் கதிதம்
யோகியாய் ஜெனித்து யோனிதன் வழியி
லுற்பவித் தமைத்தவ னொருவன்
விதிதன்விந் ததனால் தந்தையுந் தாயும்
விரும்பிசை யோகத்தி லமிசை
விளங்குவார் பெரியோ ரிவரிருப் பிடமே
வீடுவந் துரைப்பது மேலோ.
📖 பாடல் எண்: (1022) 📖
சுகாதிதஞ் சொலவும் ராஜரத் தினமாஞ்
சுடரொளி யிலகிய வயிரம்
சுழிமுனை யிலகு மதியனு மதின்பேர்
துகையுள திதுவடி வுளதாய்ச்
செகாதீத மனைத்து மடி பணிந் தொழுது
திருவுள னாயன்ற னருளால்
தேவரா யுதிப்ப தரிதரி துலகில்
சித்தராய் ஜெனிப்பது மரிது
தகாதுல கதித மனிதராய்ப் பிறந்து
தரித்திர அமிசையி லழுந்தித்
தந்தையாய் செய்கை பூசாபல யோகஞ்
சற்குரு பயனிவை தவத்தில்
யுகாயுக மளவு மனித்தியந்த தினந்தின
மொழிகுவ முலகினில் வாழ்க்கை
உடலுயிர் வளர்த்தி நாதவிந் துளதா
யொருவனே யுலகெலாம் படைத்தே.
விருத்தம்
📖 பாடல் எண்: (1023) 📖
வயிரமொரு பணவிடைகாண் கலுவத் திட்டு
மகத்தான குருவில்பண விடைதா னூட்டிச்
சயிலமெனு முதகமாஞ் செயநீ றாகும்
தனைவிளங்க மதியமிர்த சலத்தா லாட்டி
அயிலவிது அறிவாரோ ஆண்டே கேளீர்
அதுமெழுகு போல்மயன மதுகா ணெய்தல்
குயில்மொழிமா தம்பிகைப்பெண் குறித்துச் சொன்ன
கூறதனா லிருசாமங் கூர்வ தாமே.
📖 பாடல் எண்: (1024) 📖
கூறினதோர் மெழுகெடித்துச் சதிரப் பில்லை
குறிப்பாகச் செய்துரவி முகத்தி லூட்டி
வீரியமா யிரவிசுட வட்டிக் கேற்றி
மேலொருதன் வட்டியது மிகவு மூடி
தெரியசந்து வாய்புதைந்து சீலை யேழு
செய்துகதிர் முகம்படவுஞ் செலுத்தி மேவி
நெறியுடைய வைம்பதெருப் புடத்திற் சந்து
நிகரில்லா வச்சிரத்தி னேர்மை யாண்டே.
📖 பாடல் எண்: (1025) 📖
நிகரில்லாச் சத்துவி னொளிவோ கோடி
நிலைவதித் துய்யநிற மதியோ கோடி
சுகவதித வஜிகரவை டூரியச் சத்து
தொட்டகுறை யிருந்ததனால் சொல்வேன் காணும்
திகம்பரவை டூரியத்தில் பலமொன் றிட்டுத்
சிவகுருவின் பணவிடைதா னோக்கத் தாக்கி
அகமான அமுரிவிட் டிருசா மத்தில்
ஆடையிலு மெழுகுபத மாச்சு தாண்டே.
📖 பாடல் எண்: (1026) 📖
கண்டுமெழு கெடுத்துசதுர் சீராய் வாலைக்
கதிர்முகவன் சுவாலைபடிக் கடிச தானால்
நன்றுதனி வட்டியிலி மடக்கி வட்டி
நடுமூடிச் சந்துமண் சீலை யேழு
அன்றிரவி முகம்படவும் ரவியில் வாலை
யைம்பதெருப் புடந்தனிலு மடக்கி வன்னி
வென்றுபுட மாற்றியெடுத் துடைத்துப் பார்க்க
மிகவும்வை டூரியத்தில் சத்த தாண்டே.
📖 பாடல் எண்: (1027) 📖
தரணிதனி லிதையறியப் பெரியோர் சொல்லச்
சாற்றினே னிதையெடுத்துப் பதனம் பண்ணிக்
குறைவதுவந் தெய்தாமல் குருவைப் போற்றிக்
கும்பமுனி திருவடியைப் பணிந்து யானும்
மறைவுகளில் லாமலிந்நூல் ஞான வெட்டி
வசனித்தே னாயிரத் தைந்நூ றுக்குள்
துறைகோடி முறைகோடி தொந்தங்கோடி
தொட்டதெல்லாம் பலிதமெனுஞ் சொன்னாராண்டே.
📖 பாடல் எண்: (1028) 📖
பூரணச்சந் திரன்மதியை விதிக்கப் போமோ
புஷ்பரா கத்தினுட சத்து நேர்மை
காரணத்தை மனதிலுன்னிக் கவலை நீக்கிக்
காசினியோர் செய்தொழிலில் கருதார் மேலார்
வாரண முனிவரெனுந் தெட்ச ணாயன்
வரத்தாலுந் திருவள்ளுவன் வசன காவியம்
சூரனெனு மதிவீர ஞான சிங்கம்
துரைசாமி பிரமசிருஷ்டி சூக்ஷமாண்டே.
📖 பாடல் எண்: (1029) 📖
சூட்ச்சாதி சூக்ஷமெனும் புஷ்ப ராகம்
தூக்குமொரு பலமாகக் கலுவத் திட்டுப்
பட்சமெனக் களித்தகுரு பாதம் போற்றி
பரிகுருவில் பணவிடைகொண் டமுரி யாலும்
தட்சணமு மிருசாம மிடைவிடாமல்
சாதித்து ஆட்டிவழித் துண்டை யாக்கி
யிட்சணமுஞ் சதுரடைபோல் பதமாய் வாலை
யிரவிமுகம் படவுலர வெடுத்தா லாண்டே.
📖 பாடல் எண்: (1030) 📖
வலுவான வட்டிதனி லடக்கி மேலும்
வட்டியது மேல்மூடி மண்ணுஞ் சீலை
விலுவாக சந்துமண் மேலு மூடி
வெகுவாலை ரவியதனில் விளங்க மேவிச்
செலவாகா தெருவதுகே ளஞ்சு பத்து
சிவந்தவன்னி மூட்டிகன லாறிச் சென்று
பெலமான சத்ததுதான் பேரியோ ராலும்
புவியிலமைத் தெவர்களும் புதுமை யாண்டே.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
Next Post
👉 7️⃣0️⃣ ஞானவெட்டியான் (1031-1045) 👈