திருவள்ளுவ நாயனார் அருளிச்செய்த ஞான வெட்டியான் – 1500
விருத்தம்
📖 பாடல் எண்: (0473) 📖
அடங்காத பசியாச்சு எனக்கு அன்னை
அவள்வருத்த மினியறியா தழுதேன் யானும்
மாங்காரங் கொண்டெழுந்து ஓங்காரத்தை
மடக்கியே பிடித்திழுத்து மருங்கே வைத்தாள்
நீங்காம லருகிருந்த மாத ரெல்லாம்
நிலையாகப் பல அவிழ்தஞ் செய்து கூர்ந்தார்
பாங்காக அறையதுக்குள் மூன்று நாளும்
பசியுடனே யானவளும் படுத்திட் டோமே.
📖 பாடல் எண்: (0474) 📖
வீறாக நாள்மூன்றுங் கழித்து மேவி
விரும்பியென்னைச் சுமந்திருந்த அன்னை யார்க்கு
வாறான மாதர்வந்து வெந்நீர் விட்டு
மதனசூ தகந்தெளியச் சிரமேல்விட்டு
சீரான எனக்கொக்க சலநீ ராட்டிச்
செடமதுவின் கசடெல்லாஞ் சுத்தி செய்து
நேராக இருந்தஅறை புகுந்து மேல்மேல்
நிலமுரைத்துத் திலதநெற்றிக் கிட்டார் தானே.
📖 பாடல் எண்: (0475) 📖
மூளாத பசியெடுத்து அறைக்குள் ளேதான்
முழுசலிப்பால் குழல்கோதிச் சிகையும் போட்டுத்
தாளாமல் வீற்றிருக்கும் க்ஷணத்துக் குள்ளே
தயவாக அறுசுவையோ டன்ன முண்டு
தேளான பசியாறி யடைக்காய் கொண்டு
செழித்தபின்பு என்முகத்தைப் பார்த்தாள் தானே
கேளான மாதரெல்லா முடனி ருந்து
கிருபையுட னெனையெடுத்துக் களித்திட் டாரே.
📖 பாடல் எண்: (0476) 📖
மட்டில்லாப் பசியெடுத்து அன்னை யார்க்கு
மதிமயக்கந் தெளிந்துகளை சோப நீங்கித்
தட்டில்லாச் சந்தான முதித்த தென்று
சார்வாகப் பக்ஷமன்பு மிகமேன் மேலாம்
வீட்டிலரு கிருந்துமைந்த னருமை யாக
மிகமகிழ்ந்து முகமணைத்து முத்தந் தந்தாள்
கொட்டியான் சப்பாணி யிருக ரத்தால்
கூர்முகத்தில் சிறுநகையுங் கொண்டாள் தானே.
📖 பாடல் எண்: (0477) 📖
தேகமெல்லாங் குளிர்ந்தன்னை தெளிந்து மேவிச்
செடவருத்தந் தீர்ந்துஎன்மே லிரக்க மாகி
ஆகமெலாங் குளிர்ந்துசந் தோஷ மாகி
அதீதமைய மிட்டுச்சி முகமுத் திட்டுப்
பாகமுட னெடுத்தென்னை மடிமேல் வைத்துப்
பரிவாகக் கொங்கைமலர் வாயி லீந்தாள்
தாகமினி தெளியவே யமிர்த முண்ட
சட்டமதை யின்னதென்று சாற்று வேனே.
📖 பாடல் எண்: (0478)
காமப்பா லமிர்தமுண்ணுங் கருவைச் சொல்லக்
கருத்தையினி யருள் வதென்ன ஆண்டே கேளீர்
சோமப்பா லுண்டதனால் சோதி காணுஞ்
சுத்தமதி யமிர்தமுண்டால் சுழிதான் காணும்
வாமப்பா லுண்டபலன் பெரியோ ரானால்
மதுரசஞ்சீ வியையுண்டோர் ஞானி யானார்
தூமதித பாலமிர்த முண்ணு நேர்மை
சொல்லுகிறே னமிர்தரசச் சுகத்தை யாண்டே.
📖 பாடல் எண்: (0479) 📖
சுகத்தில்சுக மதிகசுக சூக்ஷா சூக்ஷஞ்
சொர்க்கபதி யானபதஞ் சுகஞா னங்காண்
அகத்திலிருந் ததீதரச பானஞ் சூக்ஷ
மாருமறி யாதவெகு அநந்த சூக்ஷம்
மகத்துவத்தை யானுரைக்க எளியோ ராண்டே
வான்புவியுஞ் செகமுழுது மதற்கொவ் வாது
இகபரமும் பரமுமிது வான சூக்ஷ
மிருதயத்தி லிருந்தவித மினிச்சொல் வோமே.
கொச்சகம்
📖 பாடல் எண்: (0480) 📖
மாமதுர பானரச வாமரச நாமறிய
கோமளமா தன்னைகெர்ப்பக் குகையைவிட்டு நாபிவழி
பூமலர்வா ழம்புவியில் பிறந்திருப்ப தாமாகில்
காமக்கு ரோதமோகக் காமியத்தில் செல்வாரே.
📖 பாடல் எண்: (0481) 📖
எத்தேச காலமிருந் தெண்சா ணுடல்மீறிப்
பத்தாயி ரம்வருஷம் பாரி லிருப்பார்காண்
உத்தமர்கள் சித்துவிளைந் தூரிலிருந் துச்சிதமாய்க்
கர்த்தனருள் சித்திபெற்றுக் காயசித்தி செய்வாரே.
கலித்துறை
📖 பாடல் எண்: (0482) 📖
நாபிக் கமலத் தருள்வாசல் புக்கிடு நற்கமலந்
தாயித்து அன்னை வளர்கெர்ப்ப வாசல் தனை யடுத்துக்
கோபித் தபான னுதைத்திட யோனிக் குழிவழிபோய்
ஆபித் ததுவருஞ் சிவயோக வாச லதுவழியே.
📖 பாடல் எண்: (0483) 📖
வழியோனி மூடி யுந்தியின் வாசல் வரும்பெரியோர்
கழிவில்லை தேக மூததைக் குழியதும் களைபிரழா
பொழிமலர் வாச மதிமலர் வீசும் புகழுடையா
ருழிவது மில்லை யபான னுதைத்த துணர்ந்திடுவேன்.
வெண்பா
📖 பாடல் எண்: (0484) 📖
காமப்பா லுண்டு கருக்குழியி லூறும்
நாமப்பா லுண்ண நல்விதியோ- சோமப்பால்
உண்டு கடைத்தேற உந்தி வழிவருகா
இன்று வினையொழியா தினி.
📖 பாடல் எண்: (0485) 📖
வாமப்பா லுண்டு மகிழ்பெறுவ தாமாகில்
காமப்பா லுண்ணக் காரணமோ- ஏமப்பால்
இருகா லொருகா லிரவிமதி யொன்றானால்
குறுகிவரும் வாய்வதுவின் கூறு.
Next Post